Lyrics: Henry Costa/Jeewaka Weerasinghe/Kishawn Christy Ravindran
Music: Jerome Shamen Perera
அந்தி மழை முகிலில்
அந்த ஆழமர நிழலில்
விளையாடி வளர்ந்தோம் வயலில்
பிஞ்சுத் தூய மனதில்
ஏதும் அறியா வயதில்
விதைத்தாயே காதல் உயிரில்
மனம் நிறைந்திங்கு சிறகடிக்குது மானே
எனையும் உனதருகில் தொலைத்திட கொஞ்சம் வாயே
காதல் கரையோரம் கதை பேசிடலாமே
தாம்பூலப் பழம் நிறைத்து அனுமதி கேட்டு வாரேன்
உனை காணக் கதிரும் வர
உனக்காகக் குயிலும் வர
விரைந்திங்கு வா
எந்தன் கரம் சேர்ந்திட வா
நீயும் நானும் ஆடிப் பாட
நதியலைகள் சந்தம் மீட்ட
இசைத்திடவா
உன்னில் உறைந்தே விடவா
மனம் வென்ற காதலியே
எந்தன் உயிரும் உனதே
உன்னோடு நான் வருவேன்
நரை காணும் வரையே
நீ அணைத்ததும்
என் வலிகளும்
தன்னாலே பறந்தோட
மனம் நிறைந்திங்கு சிறகடிக்குது மானே
எனையும் உனதருகில் தொலைத்திட கொஞ்சம் வாயே
காதல் கரையோரம் கதை பேசிடலாமே
தாம்பூலப் பழம் நிறைத்து அனுமதி கேட்டு வாரேன்