Lyrics: Lin-Manuel Miranda
Music: Lin-Manuel Miranda
உன்னை கண்டவுடன்
நானே உள்ளுக்குள் மறைவேன் தன்னாலே
உந்தன் கண் இரண்டும்
எனோ உள்ளத்தில் இறங்கும் முள்ளாக
உன்னை விலகினேன்
ஏனோ தயக்கம்
கரை விழுந்த மீனாய் மனம் தவிக்க
என்ன சொல்வேன் நான்
மனம் சொல்வதை கேள்
தன்னந்தனியா தவித்து நிற்கின்றேனே
உள்ளான எண்ணம் வேணுமோ
தெரியாதே
கண்ணோடு கண்கள் பார்க்குமோ
முடியாதே
உள்ளம் தான் உண்மை கூறுமோ
என்னோடு கைசேராய் கனவே
சொல்லிவிடு நீயே என்று
அலைகிறேன், தொலைகின்றேன்
பேச வார்த்தை இல்லாமல்
சொல்லிவிடு நீயே என்று
தவிக்கின்றேன், துடிக்கின்றேன்
அந்த வார்த்தை சொல்ல
எங்கு சென்றாலுமே
மனம் தயங்கும் உரிமை கொள்ளவே
வீட்டை தேடிச்சென்றால்
அது நழுவி கானல் ஆகுமே
எந்தன் வழிதுணை தான்
நானே தான்
என் இறுதி வரையில் வருவாயோ
நீ நாளைய அரசி
வழி நடத்திதான் எனையே செல்லு
சொல்லிவிடு நீயே என்று
அழகே சொல், அழகே சொல்
உந்தன் இதயம் திறந்து
சொல்லிவிடு நீயே என்று
அழகே சொல், அழகே சொல்
எந்தன் இதயம் நீயென்று
உன் உள்ளம் மெல்ல தெளிந்ததோ
தெளிந்தேன் நான்
கண்ணோடு கண்கள் பார்த்ததோ
பார்த்தேன் நான்
உன் உள்ளம் உண்மை கூறுதோ
நம்மோடு நெஞ்சோடு
அழகே சொல், அழகே சொல், அழகே சொல்
எந்தன் உலகம் நீயென்று
அழகே சொல், அழகே சொல்
உந்தன் உலகம் நானென்று
அழகே சொல், அழகே சொல்
உந்தன் கண்கள் திறந்தே
நீயே என்று
நீயே என்று