Lyrics: Pradeep Chandru Music: Rajaganapathy Gopalakrishnan வெயில் மழை நீதானடி சுடும் குளிர் நீதானடி தினம் தினம் தீராதடி.. கனா.. இடை வெளி கூடாதடி இமை களை மூடாதடி இதம் தரும் தீராதடி கனா.. நீரோடை போல் ஓடும் மனமே கண்ணோரம் தோள் சாய்ந்த கனவே என்னோடு நீ சேர்ந்து வரவே.. உலா நீ கோர்த்த முத்தங்கள் பெறவே உன் கையில் நான் மாய்ந்து விழவே எந்நாளும் தீராது இரவே.. நிலா என் வானிலை மாற்றிடும் மென் தூறலே ஓர் ஆயுலின் தேடலின் என் பாதியே கண் பார்த்ததும் காதலும் கை மீறியே என் வானமும் தூறிடும் உன் போதையே உன்னால பித்தான எனையே கண்ணாலே கொல்லாதே அழகே நீதானே நீதானே என் ஆச நீதானே தீராத என் காதலே நீரோடை போல் ஓடும் மனமே கண்ணோரம் தோள் சாய்ந்த கனவே என்னோடு நீ சேர்ந்து வரவே.. உலா நீ கோர்த்த முத்தங்கள் பெறவே உன் கையில் நான் மாய்ந்து விழவே எந்நாளும் தீராது இரவே.. நிலா வெயில் மழை நீதானடி சுடும் குளிர் நீதானடி தினம் தினம் தீராதடி.. கனா.. தினம் தினம் தீராதடி.. கனா.. தினம் தினம் தீராதடி.. கனா..