Lyrics: Arulraja Prabath Gajan Music: Arulraja Prabath Gajan பத்து வயசு பையன் நானு, பக்கத்துல யாரும் இல்ல, சொத்து பத்து சொந்தம் சுகம், சுனாமிக்கு கணக்கில்ல, பொணத்துல மோதிரம் புடுங்கி நா பொழச்சே, சோத்துக்கே ஒருத்தன பொணமாக்கி சிரிச்சே.
அரும்பு மீச மொளைக்கும் போது, அருவா கத்தி எடுத்த கையி. அடுத்த லெவல் போர்ம் ஆகி 47 தொட்ட கையி.
மதில் மேல பூனை மனசு சாக்கடையில பாய்ஞ்சிச்சி. சேத்த தொடைக்க நேரம் இல்ல புகை மண்டலம் சூழ்ந்திச்சி.
நல்லதால ஒன்னும் இல்ல நரகத்தால கெடச்சிச்சி. பார்டா ஓ ஜென்ம சனியன் அலரும் சத்தம் கேட்டிச்சி.
சுட்டு போடும் எண்ணத்துல Gun அ வச்சே கண்ணத்தில சேர்த்து வச்ச புண்ணியங்க கண்டதுண்டம் ஆகிச்சி.
காட்டுவோம் செருக்கு கையோட மிடுக்கு என்னா வேனுனக்கு? Return aga Thug uh.
தூக்குரதாருனு பார்கனுமா? என்ன தாக்குர போருல தோக்கனுமா? காப்புறுதி எடுத்தா இருக்க? ஆப்புறுதி தருவோம் பறக்க.
விதைத்த விதைகள் இன்று நெடுமரமாகி நிற்கும் தோழா. ரணத்தின் வடுக்கள் எல்லாம் பழிகள் கேட்க பார்க்கும் தோழா.
பணிஞ்சி போடா உனக்கு ஆயுட்காலம் அதிகம் இருக்கு. எதிர்த்து பாரு உந்தன் Photoக்கு எழுது மால கணக்கு.
வெத்து Scene போட்டு வாங்கி நீயும் கட்டிக்காத. சுறா மீனுடைய பல்லுக்குள்ள ஒட்டிக்காத.
உறுமும் நரி எல்லாம் ஊருக்குள்ள பார்த்திருக்கோம். பாட சொல்லி வடைய போட்ட காக்கா கத கேட்டிருக்கோம்
எந்த தண்ணிக்குள்ள நெருப்ப கொண்டு போற மச்சி? வாடா தொட்டுப்பாரு காட்டுத்தீயா எரியும் மச்சி.
இது எஙக Clan காலப்பாரு Timberland Be Tough but , Bow to your Mother land.
நீ என்ன சிரிச்சி செஞ்ச கொடும கொஞ்ச நஞ்சமா? நா Gun ah தொடைச்சி கைல புடிச்ச பட்டுகுஞ்சமா? யே இந்த நடுக்கோ என்ன கண்டதும் என்னா ஜொரமா? ஆ உன்ன கொல்லவே உள்ள Bullet ah மிச்சம் வச்சமா?
அன்னைக்கு என்னாச்சினா? கூட இருக்கவனே Tip ah குடுத்து, குடுகல்வத்த சந்தில பத்த பேரு சுத்து போட்டுடானுக. என்னா பண்ணணா? உயிரா ..யிரானு யோசிச்சேன்.
தலைக்கு மேல சுத்து கர்லா கட்டை வித்தையோட. எதிரி வேணா துரோகி வெரல வெட்டி வத்தல் போட. எவனும் சத்தம் போட விட்ர மாட்டோ அட்டியோட கெத்து சேர்ந்தா ஒடப்போர பெட்டியோட.
கெட்டவாட அடிக்குது நா கட்டி வச்ச பொணத்துல ரத்த ரேகை இருக்குது கை பிச்சி எடுத்த பணத்துல மிச்ச நாலு தொடருது இந்த மொத்த கோபம் மனசுல கட்டி போட முடியல,
கடத்தி மிரட்ட உறவுகள் இல்லை எனக்கேது பந்தம்? அடிச்சி உடைக்க எலும்புகள் இல்லை இது யானைத் தந்தம்.
உன்னாலே ஒருகாலும் தப்ப முடியாது நா புடிக்கிற புடியில, வருங்காலம் உனக்கேது காண விடமாட்டே நா ஆளுர விடியல.
காலன நேருல பார்கணுமா? சூளுரை எல்லா கேட்கணுமா? ஏழரை சாபம் போக்கிட எந்தன் காலுறை பக்கம் வந்திடுமா.
ஜாதக குறிப்புல பாதகமா ஒரு கண்டம் இருக்குது ஞாபகமா? கடைசி பக்கம் திருப்பு எந்தன் பேரு இருக்குது காரணமா !!
நீ என்ன சிரிச்சி செஞ்ச கொடும கொஞ்ச நஞ்சமா? நா Gun ah தொடைச்சி கைல புடிச்ச பட்டுகுஞ்சமா? யே இந்த நடுக்கோ என்ன கண்டதும் என்னா ஜொரமா? ஆ உன்ன கொல்லவே உள்ள Bullet ah மிச்சம் வச்சமா?