Lyrics: Arulsellvam Chandran
Music: Jeevanandhan Ramalingam
பறக்கிறேன் வானம் மேல தான்
மிதக்கிறேன் படக போல தான்
திசையெல்லாம் இப்போ புதுசாச்சே
மனசெல்லாம் கொட்டும் மழையாச்சே
இறையாச்சே சிறகாச்சே
பயணங்கள் தொடருதே
பாதைகள் நீழுதே
மூச்சு காத்து வாசம் கூட
நேத்து பாத்த நாட்கள் போக
ஏனோ என்ற நெனப்பு/மனசு மாற
தானா உள்ள தேனா சேர
நரக நகரம் வெளிய வேற
உயர திரியும் பறவ போல
தெருவில் நடக்க மனசு தேவ
நொடியில் கரையும் வாழ்க்க மாற
எப்போதும் மண்வாசம்
தீராத தேடல்கள் மாறாத மனசெல்லாம்
நெஞ்சோடு உண்டானதே
நீயென்றும் நானென்றும் எழுகின்ற எண்ணங்கள்
தெருவோரம் துண்டானதே..
போகின்ற வழியெல்லாம் நானென்றும் காணாத
சந்தோஷம் வந்தாடுதே
தொலைதூரம் தொலைகின்ற மனசெல்லாம் புதுசாகி
ஆனந்த கூத்தாடுதே
அட எல்லை இல்லா பார்
அறை தாண்டி எல்லாம் பார்
கறை காணா உள்ளம் சேர்
கரை தேடா கானல் நீர்