Lyrics: Vairamuthu
Music: Vairamuthu/B.Ajaneesh Loknath
தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா?, இல்லை
உன் மகனே நான் அம்மா
தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
திரு செல்வியே என் தேசம் நீயடி
திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
வைத்தாலும் இசை நீயடி அடித்தாலும் மலரின் கொடி
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் ஊனமே
தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
பொருள் இல்லையே, சிறு பொன்னும் இல்லையே
பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன்
இந்த இன்ப மகாராஜ பெற்ற புது ரோஜ Elizabeth ராணியின் பேத்தியே
தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா?, இல்லை
உன் மகனே நான் அம்மா
தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்