Lyrics: Nichalean Mahendrasingham Music: Nichalean Mahendrasingham ஹோ மாயமே ஹோ மாயமே காதல் தாகமே
உயிர் காட்டிலே நான் அலையவே துணையாய் மாறிடு
மென் தீயிடை உன் மேனியே என் காந்தள் மேகமே
நான் வாங்கிய உன் மூச்சிலே அழல் சுடராய் எரிகிறேன்
ஹோ சாமரா ஹோ சாமரா யான் தேடும் போதையே
எஞ்சலே நீ கொஞ்லே உன் காதல் தஞ்சமே
நீ என் ஈர மழைத்துளிதான் உன் சாரல் வேண்டி நானும் பிள்ளையானேன் நான் ஓர் பருவ உயிர்நிலைதான் உன் காதல் கொள்ள நான்
முகிலே என் நெஞ்சிலே நீ துஞ்சலே இனி மாறும் தேக நிலை வா நின் மொழிகளால் என் கவிதையுள் பொருள் சேருமோ
நுதலே நான் நுகர்ந்திட வெண் நளினமே மெல்லக் குழையுதோ சகியே துகில் சரியவே ரதம் ஆகினாய் நான் கலைஞனோ
தினம் ஏக்கம் கூட்டினாய் ஒரு தீண்டலாக மாறினாய் நான் ஏங்கித் தொலைகிறேன் சிறு கூடல் கொண்டே ஏந்துவாய்
ஓ சாமரா காதலா மோதவா நானுந்தன் மூங்கிலா எனை மீட்டிடு
ஓ ஜீவனே தேயுதே காயுதே இதழ்களே வரமென சுகம் கூட்டிடு