Lyrics: Kathiravan Udayakumar
Music: R Sanjay/Kathiravan Udayakumar
உருகாத மனமும் உண்டோ
உருகாத மனமும் உண்டோ
உன்னைக் கண்டு உருகாத மனமும் உண்டோ
உன்னை நினைத்து உருகாத மனமும் உண்டோ
திரைபோட்டு மறைத்தாலும்
மறையிட்டுத் தடுத்தாலும்
அதிகாரம் திளைத்தாலும்
விதிரூபம் எடுத்தாலும்
வினைதடை விதித்தாலும்
சிலையாக நின்றாலும்
ஒளியாக மலர்ந்தாலும்
மலராகப் பிறந்தாலும்
மணமாக விரிந்தாலும்
கலையாக வடித்தாலும்
சுவையாகக் கனிதந்தாலும்
நிழலாக நின்றாலும்
மொழியாக இனித்தாலும்
விஞ்ஞானம் அறிந்தாலும்
மெய்ஞ்ஞானம் உணர்ந்தாலும்
காலத்தைக் கடந்தாலும்
பலரூபம் எடுத்த தாலும்